Tuesday, July 28, 2026

தேர்தலுக்குப் பின் : 13

 பெருமாள் மணி, பீத்த பத்திரிக்கையாளர் மணி, ஷபீர் போன்றவர்கள் கூலிக்காகவோ, திமுக மீதான வெறுப்பின் காரணமாகவோ தவெகவை தமிழர் தலையில் கட்ட உதவியிருக்கிறார்கள். இதனால் தமிழ்நாட்டுக்குக் கேடு வரும் என்று தெரிந்து செய்திருந்தால் அது பொதுமக்களுக்கு அவர்கள் செய்த துரோகம்.

மே 30, 2026

தவெகவின் இணைய அடியாட்கள்! (ஆங்கிலப் பதிவு)

 Whenever I think about techno-savvy youngsters working for corrupt politicians, I remember the film 'Enemy of the State' featuring Will Smith, in which the youngsters also get punished in the end for spreading lies and using technology for illegal activities. 'We only helped the politician technically; we didn’t realize the repercussions,' they lament.

That’s what’s already happening in TN as the TVK government, formed by lies and fake propaganda, is getting exposed every minute. The virtual warriors are coming out like rats from their holes, pleading guilty.

It is a lesson for youngsters, especially Media / Viscom students who are more into celebrity management instead of producing meaningful media.

Fr. Rajanayagam, a Jesuit and the godfather of Viscom education in TN, must be embarrassed for creating a creamy layer of ambitious, corrupt, and irresponsible media personalities in the state. Probably he didn’t intend it in his time, but his followers (teachers) have totally destroyed the young generation, making them insensitive and ultra-careerist across the state.

I have hardly met any brave, committed, and creative media / Viscom teacher in Tamil Nadu who would prefer to screen Kurosawa or Bergman instead of a Spielberg / Nolan film to their students.

The young virtual warriors who work for TVK may be thrilled by the immediate results as lies spread faster and are acutely tasty. But when the truth bites back, it will be chronic and painful.

Amudhan RP
Documentary Practitioner
Chennai

29 மே 2026

திமுக அரசின் சாதனைகள் : ஆங்கிலப் பதிவு

Actually, the then TN Government under MK Stalin did exceptionally well in every sense.

The DMK Government developed the state economically, socially, and politically, ticking all the boxes in terms of growth, FDI, employment, social justice, communal harmony, gender equality, education, health, sports, public transport, and infrastructure development.

MKS was very proactive and courageous in protecting state rights, linguistic sovereignty, archaeological evidence, heritage sites, and ecological balance.

There was a time when every Tamilian would feel proud to live in this period. People would envy you for having a CM like MKS. He set a standard for a leader who can be courteous, committed, and professional.

MKS had some fantastic people in his ministry and administration, starting from Ma Su, PTR, Thangam Thennarasu, Anbil Mahesh, TRB Raja, and of course Udhaynidhi, who were competing with each other with their outstanding performances.

The party seriously believed that the people of TN would decide logically and rationally while voting.

Unfortunately, people fooled themselves by trusting the fake propaganda and extremely ambitious social media manipulation by the TVK gang.

It’s a challenge for all analysts, critics, activists, and thinkers. Everyone is trying hard to find fault with the then DMK government instead of questioning the fraudulent practices of the TVK gang.

It’s a lesson for all political parties: giving good governance and waiting for voters to respond positively isn’t enough; it’s necessary to expect the worst always, even from your loyal partners and voters, because anyone can betray you, and everyone is capable of being weak, cowardly, stupid, and crooked.

We can only pity the voters, especially the educated youth in TN, who trusted a film star over a seasoned politician, despite having all access to the facts, for their vulnerability and ignorance.

Amudhan RP
Documentary Practitioner
Chennai

29 மே 2026

தேர்தலுக்குப் பின் : 12

 தவெக நாடகத்தால் பல பர்னிச்சேர்கள் உடைக்கப்பட்டன. எனது பேவரைட் காங்கிரஸ். சும்மா தூள்!

தேர்தலுக்குப் பின் : 11

 எல்லோரும் தவெகவில் இணைகையில், அக்கட்சியே பாஜகவில் இணைந்தால் பிளாஸ்ட் தான்!

குறைக்கப்பட்ட பேருந்துகள்!

 தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்திருக்கிறது.

திமுக தொடர்ந்திருந்தால், பெட்ரோல், டீசல் பிரச்சனையால் ஏற்பட்டிருக்கும் சுமையை அரசு தாங்கிக்கொண்டு, பேருந்துகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்திருக்காது. அவர்களது அனுபவமும், சமூக அக்கறையும் இந்தத் துணிச்சலை அவர்களுக்குக் கொடுத்திருக்கும்.

ஏனெனில் பொருளாதாரம் என்பது கணக்கு வழக்கு மட்டுமல்ல. யாருக்கு எதை எவ்வளவு கொடுப்பது என்பதும் பொருளாதாரம் தான். அதனால் தான் திமுக தோற்கடிக்கப்பட்டது.

28 மே 2026

ஜெயாவுக்குப் பிடிக்காத மெட்ரோ திட்டம்!

 இரும்புப் பெண்மணி ஜெயாவுக்கு கலைஞர் கொண்டு வந்ததால் மெட்ரோ திட்டத்தைப் பிடிக்கவில்லை.


திமுக ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் எதிரிகள் ஒன்று சேர்ந்து எதையாவது காரணத்தை உருவாக்கி அடுத்த முறை தோற்கடித்துவிடுவார்கள் அல்லவா. அதே போல அடுத்த முறை அதிமுக ஆட்சிக்கு வந்த போது ஜெயா மெட்ரோ திட்டத்தை நிறுத்தினார். மோனோ ரயில் எனும் திட்டத்தைக் கொண்டுவர முயற்சித்தார். அதில் வழக்கம் போல கடுமையாகத் தோற்றுப்போனார்.

அடுத்த முறை கலைஞர் வந்து மெட்ரோ திட்டம் மீண்டும் தொடங்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

மீண்டும் திமுக ஆட்சி தோற்கடிக்கப்பட்டது.

மீண்டும் அடிமைகள் கட்சி ஆட்சிக்கு இரண்டு முறை தொடர்ச்சியாக வந்தது. மெட்ரோ தட்டுத்தடுமாறி வளர்ந்து வந்தது. வேறு வழியில்லாமல் ஜெயா அதைத் தொடங்கினார். இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு அதிக விலைக்கு டிக்கட்டுகள் விற்கப்பட்டன. மாநில அரசு அதற்கான இழப்பீட்டைத் தரவில்லை.

பொதுப் போக்குவரத்தின் நோக்கம் லாபம் அல்ல. மக்களுக்குப் பயனளிப்பதே. இந்திய ரயில்வே கூட ஐந்து ரூபாய்க்குக் கூட டிக்கெட்டுகளை விற்கிறது. அதன் நோக்கம் மக்கள் எளிதாகப் பயணம் செய்யவேண்டும். படிக்க வேண்டும், வேலைக்குப் போகவேண்டும், தொழில் செய்யவேண்டும், பொருட்கள் நகரவேண்டும், பொருளாதாரம் அப்போது தான் வளருமென்பதால்.

ஆனால் ஜெயா நிதி ஒதுக்கீடு செய்யாததால், மெட்ரோ வந்தாலும் எல்லோருக்கும் எட்டாக்கனியாகவே இருந்தது.

மீண்டும் திமுக ஆட்சி வந்து மெட்ரோ புத்துயிர் பெற்றது. ஜெயாவின் பங்காளிகளான தில்லி சுல்தான்கள் மெட்ரோவுக்கு தமது பங்கைக் கொடுக்கவில்லை. திமுக அரசே கடன் வாங்கி மெட்ரோ திட்டத்தை தொடங்கியது (இது போல பல வளர்ச்சித் திட்டங்களுக்குக் கடன் வாங்கித் தான் எல்லா நாடுகளும் மாநிலங்களும் தமது பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்கின்றன. ஆனாலும் திமுக மட்டும் அதற்காகத் தண்டிக்கப்படுகிறது).

இந்த முறை திமுக ஆட்சிக்கு மீண்டும் வந்திருந்தால் மெட்ரோ சென்னை முழுக்கப் பரவியிருக்கும்.

எனக்குத் தெரிந்த திமுக வெறுப்புப் பார்ப்பனர் கடந்த திமுக ஆட்சியின் நிறைவுக் காலத்தில் சென்னைக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த போது சென்னையைப் பார்த்து மலைத்துப் போனார் "என்ன அற்புதமாக வளர்ந்திருக்கிறது சென்னை" என்று வெறுப்பை, தமது கொண்டையை மறந்து பாராட்டினார்.

இன்னொரு சங்கி கோஷ்டியினர் சென்னைக்குப் புதிதாகத் தொழில் தொடங்க வந்த போது, சென்னையில் வளர்ச்சியைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள். கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டித் தொழிலை சென்னையில் வளர்க்கின்றனர். சென்னையை நம்பிக்கை தரும் நகரமாகப் பார்க்கின்றனர்.

அப்படிப்பட்ட சென்னையை உருவாக்கிய திமுக தான் பொய்களாலும் துரோகத்தாலும் மீண்டும் தோற்கடிக்கப்பட்டது.

சென்னையில் மெட்ரோ பெங்களூருக்கு முன்பே தொடங்கப்பட்டது. திமுகவின் எதிரிகளின் செல்லப்பிள்ளை ஜெயாவின் அடாவடித்தனம் காரணமாக அது முடக்கப்பட்டது.

இப்போது பெங்களூருவில் மெட்ரோ ஆல் போல் பரவி எங்கு வியாபித்திருக்கிறது. அதனோடு ஒப்பிடுகையில் சென்னை மெட்ரோ ஒரு குழந்தை தான். இந்தக் குறைக்கு அதிமுக, குறிப்பாக ஜெயலலிதா தான் காரணம்.

திமுக தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குக் காரணி.
அதை தற்குறிகள் ஆட்சிக்கு வந்து பார்த்து கற்றுக்கொள்வார்கள். ஏற்கனவே முந்தைய ஆட்சியின் சாதனை காரணமாக தமிழ்நாட்டுக்கு பல துறைகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதை எந்த நடுநிலைவாயர்களும் குறிப்பிடவில்லை. எந்தத் திமுகவை வாய்க்கு வாய் தீயசக்தி என்று நடிகர் சொன்னாரோ, அந்த திமுகவின் சாதனைக்காக, தற்குறி ஆட்சிக்கு விருதுகள் கிடைப்பது தான் வரலாற்று நகைமுரண்.

ஆனால் நடிகரை நம்பும் படித்த தற்குறி வாக்காளர்களுக்கு சுயமரியாதையும் பகுத்தறிவும் இருந்தால் சாட் ஜிபிடியையாவது பார்த்து தமிழ்நாட்டின் உண்மை நிலவரத்தைத் தெரிந்து கொள்ளட்டும்.

மெட்ரோவில் பயணிக்கும் ரீல்ஸ் போடும் இளம் தற்குறிகளுக்கு இந்த வரலாறு தெரியுமா?

அதைவிடக் கொடுமை, நம்மில் பலருக்கு மெட்ரோ என்பது மாநில அரசின் முன்முயற்சியில் தான் வருகிறது என்பது கூடத் தெரியாது. அங்கு ஏன் இந்தி ஒலிக்கப்படுவதில்லை என்பதைக் கவனித்தால் புரிந்திருக்கும்.

நமக்குத் தான் உண்மையைத் தேடுவது கிரிஞ்சுத்தனம் அல்லவா!

அமுதன் ஆர்.பி.
ஆவணப்பட இயக்குனர்
சென்னை

https://www.bbc.com/news/world-asia-india-33307399

28 மே 2026

திமுகவின் அறிவுச்சூழல்!

  திமுக ஆட்சி காலத்தில் அரசு சார்பாக நடத்தப்பட்ட இலக்கியத் திருவிழாக்களில் இடதுசாரிகள், அம்பேத்கரியவாதிகள், தமிழ்த்தேசியவாதிகள், பெண்ணியவாதி...