இரும்புப் பெண்மணி ஜெயாவுக்கு கலைஞர் கொண்டு வந்ததால் மெட்ரோ திட்டத்தைப் பிடிக்கவில்லை.
திமுக ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் எதிரிகள் ஒன்று சேர்ந்து எதையாவது காரணத்தை உருவாக்கி அடுத்த முறை தோற்கடித்துவிடுவார்கள் அல்லவா. அதே போல அடுத்த முறை அதிமுக ஆட்சிக்கு வந்த போது ஜெயா மெட்ரோ திட்டத்தை நிறுத்தினார். மோனோ ரயில் எனும் திட்டத்தைக் கொண்டுவர முயற்சித்தார். அதில் வழக்கம் போல கடுமையாகத் தோற்றுப்போனார்.
அடுத்த முறை கலைஞர் வந்து மெட்ரோ திட்டம் மீண்டும் தொடங்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
மீண்டும் திமுக ஆட்சி தோற்கடிக்கப்பட்டது.
மீண்டும் அடிமைகள் கட்சி ஆட்சிக்கு இரண்டு முறை தொடர்ச்சியாக வந்தது. மெட்ரோ தட்டுத்தடுமாறி வளர்ந்து வந்தது. வேறு வழியில்லாமல் ஜெயா அதைத் தொடங்கினார். இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு அதிக விலைக்கு டிக்கட்டுகள் விற்கப்பட்டன. மாநில அரசு அதற்கான இழப்பீட்டைத் தரவில்லை.
பொதுப் போக்குவரத்தின் நோக்கம் லாபம் அல்ல. மக்களுக்குப் பயனளிப்பதே. இந்திய ரயில்வே கூட ஐந்து ரூபாய்க்குக் கூட டிக்கெட்டுகளை விற்கிறது. அதன் நோக்கம் மக்கள் எளிதாகப் பயணம் செய்யவேண்டும். படிக்க வேண்டும், வேலைக்குப் போகவேண்டும், தொழில் செய்யவேண்டும், பொருட்கள் நகரவேண்டும், பொருளாதாரம் அப்போது தான் வளருமென்பதால்.
ஆனால் ஜெயா நிதி ஒதுக்கீடு செய்யாததால், மெட்ரோ வந்தாலும் எல்லோருக்கும் எட்டாக்கனியாகவே இருந்தது.
மீண்டும் திமுக ஆட்சி வந்து மெட்ரோ புத்துயிர் பெற்றது. ஜெயாவின் பங்காளிகளான தில்லி சுல்தான்கள் மெட்ரோவுக்கு தமது பங்கைக் கொடுக்கவில்லை. திமுக அரசே கடன் வாங்கி மெட்ரோ திட்டத்தை தொடங்கியது (இது போல பல வளர்ச்சித் திட்டங்களுக்குக் கடன் வாங்கித் தான் எல்லா நாடுகளும் மாநிலங்களும் தமது பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்கின்றன. ஆனாலும் திமுக மட்டும் அதற்காகத் தண்டிக்கப்படுகிறது).
இந்த முறை திமுக ஆட்சிக்கு மீண்டும் வந்திருந்தால் மெட்ரோ சென்னை முழுக்கப் பரவியிருக்கும்.
எனக்குத் தெரிந்த திமுக வெறுப்புப் பார்ப்பனர் கடந்த திமுக ஆட்சியின் நிறைவுக் காலத்தில் சென்னைக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த போது சென்னையைப் பார்த்து மலைத்துப் போனார் "என்ன அற்புதமாக வளர்ந்திருக்கிறது சென்னை" என்று வெறுப்பை, தமது கொண்டையை மறந்து பாராட்டினார்.
இன்னொரு சங்கி கோஷ்டியினர் சென்னைக்குப் புதிதாகத் தொழில் தொடங்க வந்த போது, சென்னையில் வளர்ச்சியைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள். கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டித் தொழிலை சென்னையில் வளர்க்கின்றனர். சென்னையை நம்பிக்கை தரும் நகரமாகப் பார்க்கின்றனர்.
அப்படிப்பட்ட சென்னையை உருவாக்கிய திமுக தான் பொய்களாலும் துரோகத்தாலும் மீண்டும் தோற்கடிக்கப்பட்டது.
சென்னையில் மெட்ரோ பெங்களூருக்கு முன்பே தொடங்கப்பட்டது. திமுகவின் எதிரிகளின் செல்லப்பிள்ளை ஜெயாவின் அடாவடித்தனம் காரணமாக அது முடக்கப்பட்டது.
இப்போது பெங்களூருவில் மெட்ரோ ஆல் போல் பரவி எங்கு வியாபித்திருக்கிறது. அதனோடு ஒப்பிடுகையில் சென்னை மெட்ரோ ஒரு குழந்தை தான். இந்தக் குறைக்கு அதிமுக, குறிப்பாக ஜெயலலிதா தான் காரணம்.
திமுக தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குக் காரணி.
அதை தற்குறிகள் ஆட்சிக்கு வந்து பார்த்து கற்றுக்கொள்வார்கள். ஏற்கனவே முந்தைய ஆட்சியின் சாதனை காரணமாக தமிழ்நாட்டுக்கு பல துறைகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதை எந்த நடுநிலைவாயர்களும் குறிப்பிடவில்லை. எந்தத் திமுகவை வாய்க்கு வாய் தீயசக்தி என்று நடிகர் சொன்னாரோ, அந்த திமுகவின் சாதனைக்காக, தற்குறி ஆட்சிக்கு விருதுகள் கிடைப்பது தான் வரலாற்று நகைமுரண்.
ஆனால் நடிகரை நம்பும் படித்த தற்குறி வாக்காளர்களுக்கு சுயமரியாதையும் பகுத்தறிவும் இருந்தால் சாட் ஜிபிடியையாவது பார்த்து தமிழ்நாட்டின் உண்மை நிலவரத்தைத் தெரிந்து கொள்ளட்டும்.
மெட்ரோவில் பயணிக்கும் ரீல்ஸ் போடும் இளம் தற்குறிகளுக்கு இந்த வரலாறு தெரியுமா?
அதைவிடக் கொடுமை, நம்மில் பலருக்கு மெட்ரோ என்பது மாநில அரசின் முன்முயற்சியில் தான் வருகிறது என்பது கூடத் தெரியாது. அங்கு ஏன் இந்தி ஒலிக்கப்படுவதில்லை என்பதைக் கவனித்தால் புரிந்திருக்கும்.
நமக்குத் தான் உண்மையைத் தேடுவது கிரிஞ்சுத்தனம் அல்லவா!
அமுதன் ஆர்.பி.
ஆவணப்பட இயக்குனர்
சென்னை
https://www.bbc.com/news/world-asia-india-33307399
28 மே 2026
No comments:
Post a Comment