Tuesday, July 28, 2026

திமுகவின் அறிவுச்சூழல்!

 திமுக ஆட்சி காலத்தில் அரசு சார்பாக நடத்தப்பட்ட இலக்கியத் திருவிழாக்களில் இடதுசாரிகள், அம்பேத்கரியவாதிகள், தமிழ்த்தேசியவாதிகள், பெண்ணியவாதிகள், சூழலியவாதிகள், பாலியல் சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் கருத்துரை ஆற்ற அழைக்கப்பட்டனர்.

பெரும்பாலும் யாரை எங்கு அழைப்பது என்கிற இந்த முடிவுகளை அதிகாரிகள் தான் எடுத்தனர் என்றாலும் திமுக ஆட்சியில் தான் இது நடந்தது என்பதையும் அதற்கு திமுக ஆட்சி ஏற்படுத்திய சூழலும் (DMK Eco System) தான் காரணம் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம், சர்வதேசப் புத்தக கண்காட்சி ஆகியவை எல்லாம் திமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டவை.

திமுகவுடன் கூட்டணியில் இருந்தவர்கள் தயவில் தற்போதைய ஆட்சி நடந்தாலும், இந்த விழாக்கள் நடக்குமா? அப்படியே நடந்தாலும் அவற்றின் அரசியல் மற்றும் கலைத்தன்மை எப்படி இருக்கும்?

கடந்த அறுபது ஆண்டுகளாக திமுகவின் அறிவுச்சூழல் தான் இங்கு நிலவியது.

இனிமேல் அது என்னவாகும்?

31 மே 2026

மறைந்து போன பாசிச எதிர்ப்பு!

 ஆட்சி மாற்றத்தால்

நடந்தது பாஜகவைப் பற்றிய நமது கவனத்தைத்
திசை திருப்பி இளைஞர்கள் மத்தியில் திமுக வில்லனாக்கப்பட்டதே.

இத்தனைக்கும் நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கும், உரிமைக்கும் திமுக விட பங்காற்றியவர்கள் யாரும் இல்லை.

இப்போது இதே இளைஞர்கள் அனுபவிக்கும் அனைத்து வசதிகளையும் உருவாக்கியது திமுகவே.

ஆனால் இப்போது இதே இளைஞர்களுக்கு திமுக என்றால் கசக்கிறது.

இதற்கு நடுநிலவாயர்கள் முதல் கூட்டணிக் கட்சியினர் வரை கணிசமான பங்காற்றியுள்ளனர்.

பாஜக வழக்கம் போல பாசிசத்தை நார்மலைஸ் செய்வதற்கான அனைத்து வேலைகளை செவ்வனே செய்து வருகிறது.

ஏறக்குறைய முஸ்லீம் வெறுப்பு, பார்ப்பன ஆதிக்கம் என்பது கேள்விக்கு அப்பாற்ப்பட்டதாகிவிட்டது.

ரூபாயின் மதிப்பு நூறை எப்போது வேண்டுமானாலும் தொடலாம். அது இந்தியப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியின் அடையாளமாகவே கருதப்படும்.

ஆனால் நடிகரின் ரசிகர்கள் சாவு வீட்டுக்கு அவர் தமது ‘மற்றவளை’ அழைத்து வந்ததைப் பற்றிக் கவலைப்படுகின்றனர்.

இதற்கு முன்பெல்லாம் வீடுகளில் இருக்கும் பெருசுகளுடன் பழமையான கருத்துக்களை எதிர்த்து வாதிடுவோம். இப்போது இளம் தற்குறிகளுடன் முட்டிக்கொண்டிருக்கிறோம்.

பகுத்தறிவும் சுயமரியாதையும் தான் நமது ஆயுதங்கள்!

31 மே 2026

திமுக, திமுகவாக இருப்பதே கடினம் !

 திமுக ஆட்சி கொள்கை ரீதியாக, வெளிப்படையாக தலித், இஸ்லாமியர், கிறிஸ்தவர், பெண்கள், பாலியல் சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் ஆதரவு நிலைப்பாடு எடுப்பதால் இந்தப் பட்டியலுக்குள் வராத ஆட்களுக்கு திமுகவைப் பிடிப்பதில்லை.


திமுக ஆட்சியில் மேற்படி பட்டியலில் வருவோருக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கும் இந்த வெறுப்பு தான் காரணம்.

இந்த வழக்குகளில் காவல்துறையினர் கண்டிப்பாக திமுகவிற்கு எதிராக சேம் சைட் கோல் போடுவார்கள். வழக்குகளைப் பதிய மாட்டர்கள். பாதிக்கப்பட்டவர்களை அலைக்கழிப்பார்கள். முடிந்தால் அவர்களையும் அடிப்பார்கள். ஏனெனில் அவர்களில் பலர் ஜாதியவாதிகளே!

திருப்புறங்குன்ற விவகாரத்தில் நடிகர் கட்சி எந்த நிலைப்பாடும் எடுக்காமல் இருந்தது, இந்த வெறுப்பாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட் செய்தி தான். நாங்கள் தர்கா அருகே விளக்கு ஏற்றும் முயற்சியைத் தடுக்க மாட்டோம் என்பதே அது. எனவே தான் திருப்பறங்குன்றத்தில் நடிகர் சார்பாக ஒரு சங்கி நிறுத்தப்பட்டு அவரும் வென்றார்.

தமிழ்நாட்டில் அதிகாரச் சமநிலையை (status quo) பாதுகாக்க நினைப்பவர் யாருக்கும் திமுகவைப் பிடிக்காது. எந்தச் சமூகப் பின்னணியிலும் இந்தப் பழமைவாதிகள் இருப்பார்கள்.

பல பேர் கம்யூனிஸ்டாக இருப்பதே பார்ப்பனர்களின் (பார்ப்பனர் வேறு பார்ப்பனியம் வேறு என்று வியாக்கியானமும் தருவார்கள்) மீதான மயக்கத்தினால் தான். வர்க்கம் தான் பிரதான பிரச்சனை அவர்களுக்கு. அதனால் தான் அரிய வகை ஏழைகளுக்கு (EWS) இட ஒதுக்கீடு வேண்டும் என்று ரங்கராஜர் (கம்யூனிஸ்டுகளுக்கு ஜாதி இல்லை என்று நம்புவோம்) மாநிலங்களவையில் வாக்களித்தித்தார். கண்டிப்பாக பிற்படுத்தப்பட்ட அல்லது பட்டியலின கம்யூனிஸ்ட் இதை ஆதரித்திருக்க மாட்டார்.

“என்னங்க அநியாயமா இருக்கு” என்று அப்போதே அங்கேயே அய்யங்காருடன் முரண்பட்ட கனிமொழி கருணாநிதியை எந்த ஆதிக்கவாதிக்குத் தான் பிடிக்கும்?

தமிழ்த்தேசியவாதிகள் பலருக்கு கடவுள், மதம், ஜாதி, வர்க்கம் மீதான விமர்சனமே இருக்காது. முரட்டு, வறட்டு மொழி வெறியே பலரை புலி ஆதரவாளர்கள் ஆக்கியது.

தலித்துகள் தமது ஜாதிய விடுதலைக்காகப் போராடுவது நியாயம் தான். ஜாதி ஒழிப்பு பற்றிப் பேசுவதெல்லாம் சரி தான். ஆனால் பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்ட சூத்திரனுக்காகவும் திமுக போராடவேண்டியிருக்கிறதே! அதை தலித்துகள் ஏற்றுக்கொள்வார்களா?

இப்படி திமுக, திமுகவாக இருப்பதே கடினம் தான்.

30 மே 2026

தேர்தலுக்குப் பின் : 16

 திமுக ஆதரவாளர்கள் சந்திப்பு ஒன்றை ஐம்பது வயது ஆட்களுக்கும் நடத்தலாமே!

30 மே 2026

தேர்தலுக்குப் பின் : 15

 திமுகவிற்கு எதிராகப் புரளியைப் பரப்புவோர் மட்டுமல்ல, அதை உடனடியாக நம்பும் தற்குறிகள் (அதைவிட) ஆபத்தானவர்கள்.

தவெகவின் பொய்கள்!

 தவெகவின் பொய்கள்!

இதுவரை இல்லாத முதல்வர் இருக்கை மீதான வெள்ளைத் துண்டை விஜய் (கொண்டு வந்ததோடு அவரே அதை) நீக்கியதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன.

30 மே 2026

தேர்தலுக்குப் பின் : 14

 நடப்பவற்றைப் பார்க்கையில் நம்ம ஆளுக 34% பேர் தற்குறியே தான்.

30 மே 2026

திமுகவின் அறிவுச்சூழல்!

  திமுக ஆட்சி காலத்தில் அரசு சார்பாக நடத்தப்பட்ட இலக்கியத் திருவிழாக்களில் இடதுசாரிகள், அம்பேத்கரியவாதிகள், தமிழ்த்தேசியவாதிகள், பெண்ணியவாதி...