Thursday, June 2, 2016

குஜராத் 2002 படுகொலை - குல்பர்க் சொசைட்டி வழக்கில் தீர்ப்பு!

24 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு!



குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் 2002ம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக மதவெறித்தாக்குதல் நடத்தப்பட்டது.
முதல்வர் மோடியின் ஆதரவுடன் பாஜக, வி.எச்.பி.யினர் முன்னின்று காவல்துறையின் ஒத்துழைப்புடன் நடத்திய கொடூரப் படுகொலைகள் குஜராத்தில் பல்வேறு இடங்களில் நடந்தன.
அதில் ஒன்று குல்பர்க் சொசைட்டி படுகொலை. 69 பேர் கொல்லப்பட்டார்கள். அந்த சொசைட்டியே எரித்து சாம்பலாக்கப்பட்டது.
அந்த வழக்கு ஏறக்குறைய 14 ஆண்டுகள் நடந்தது.
இன்று அந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
24 பேருக்குத் தான் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.
அதில் 11 பேர் மீது தான் கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
யார் மீதும் சதித் திட்டம் திட்டியதாக குற்றம் சாட்டப்படவில்லை.
2000 பேர் கூடி நடத்திய கொலைத் தாக்குதல் இது.
வி.எச்.பி.தலைவர் அதுல் வேத் எனும் ஒரு அரசியல்வாதி மட்டும் தான் குற்றவாளி என்று தீர்ப்பு வந்துள்ளது.
பாஜகவினர் எல்லோரும் தப்பிவிட்டனர்.
இது தான் நீதி.

காலை 9மணிக்குத் தொடங்கிய தாக்குதல் பிற்பகல் 4 மணிக்கு நடந்து முடிந்து விட்டது.
இந்தப் படுகொலை நடக்கவிருப்பதற்கு சற்று முன்பு மோடி (அப்போதைய குஜராத் முதல்வர்) யிடம், கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இசான் ஜாஃப்ரி தொலைபேசியில் பேசியிருக்கிறார். பாதுகாப்பு கேட்டிருக்கிறார். "நீங்கள் இன்னும் உயிரோடா இருக்கிறீர்கள்?" என்று மோடி கேட்டதாக ஜாஃப்ரி தன் மனைவியிட்ம் வருத்தப்பட்டிருக்கிறார்.
ஆனால் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரிடம் மோடி எனக்கு மாலை 8 மணிக்குத் தான் இது தெரியும் என்று சொல்லியிருக்கிறார்.
குஜராத் கலவரம் தான் இந்தியாவில் (1992 பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு) இந்து மத்வெறி விஷ்வரூபம் எடுப்பதற்கு முக்கியக் காரணம்.
இந்தப் படுகொலைகள், பின்னாட்களில் மோடி பாஜகவில் பெரிய சக்தியாவதற்கும் அதன் பிறகு குஜ்ராத் ஒரு மதவெறிக்கூடாரம் ஆவதற்கும் காரணமாக இருந்தவை.
இதற்கு முன் இதே கலவரத்தின் போது படுக்கொலைகள் நடந்த நரோடா பாட்டியாவில் தீர்பு வந்து பாஜக மந்திரி உட்பட பலர் தண்டிக்கப்பட்டார்கள்.
இந்த வழக்குகளை நடத்த வேண்டிய குஜராத் போலீசும், அரசும், நீதிமன்றங்களும் நியாயமாக நடக்கவில்லை என்பதற்காக உயர்நீதிமன்றம் தலலியிட்டு இந்த வழக்குகளை சிறப்புப் புலானாய்வுப் படை ஒன்றை அமைத்து அதன் கையில் கொடுத்தது.
இந்த வழக்குகளை வீரத்துடன் தொடர்ந்து நடத்தி வரும் தோழர் தீஸ்தா செதால்வத் அவர்களுக்கும் அவரது வழக்கறிஞர் அணிக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.

பின் குறிப்பு :

ஒரு குண்டு வெடிப்பு வழக்கில் இஸ்லாமியர்களை தண்டிக்க அரசு நியமித்த சிறப்புப் புலனாய்வுப் பிரிவு வழக்கறிஞர் காட்டும் ஆர்வம் அக்கறை குல்பர்க் சொசைட்டி வழக்கில் இல்லை என்பதை அவர் தொலைக்காட்சிக்கு அளிக்கும் பேட்டியில் தெரிகிறது.
24பேரை தண்டித்துவிட்டார்களே என்று தோற்றுப் போன வக்கீல் போல நிற்கிறார்.
பாதிக்கப்பட்டவர்களுக்காக வழக்காடி, குற்றம் சாட்டப்பட்வர்களுக்கு அதிக பட்ச தண்டனை வாங்கித் தருவது தான் அவர் வேலை.
என்ன அதிசயம் இது?
பாதிக்கப்படவரகள் இஸ்லாமியர்கள் என்பதாலும் குற்றம் சாட்டப்ப்பட்டவர்கள் இந்துக்கள் என்பதாலும் இந்துத்துவ சகிதிகள் வருத்தப்படுவார்கள் என்பதாலும் அப்படி நடந்து கொள்கிறாரா?
நீதிமன்றத்தில் அவர் எப்படிப் பம்மியிருப்பார் என்பதை உணரமுடிகிறது.