ஆட்சி மாற்றத்தால்
நடந்தது பாஜகவைப் பற்றிய நமது கவனத்தைத்திசை திருப்பி இளைஞர்கள் மத்தியில் திமுக வில்லனாக்கப்பட்டதே.
இத்தனைக்கும் நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கும், உரிமைக்கும் திமுக விட பங்காற்றியவர்கள் யாரும் இல்லை.
இப்போது இதே இளைஞர்கள் அனுபவிக்கும் அனைத்து வசதிகளையும் உருவாக்கியது திமுகவே.
ஆனால் இப்போது இதே இளைஞர்களுக்கு திமுக என்றால் கசக்கிறது.
இதற்கு நடுநிலவாயர்கள் முதல் கூட்டணிக் கட்சியினர் வரை கணிசமான பங்காற்றியுள்ளனர்.
பாஜக வழக்கம் போல பாசிசத்தை நார்மலைஸ் செய்வதற்கான அனைத்து வேலைகளை செவ்வனே செய்து வருகிறது.
ஏறக்குறைய முஸ்லீம் வெறுப்பு, பார்ப்பன ஆதிக்கம் என்பது கேள்விக்கு அப்பாற்ப்பட்டதாகிவிட்டது.
ரூபாயின் மதிப்பு நூறை எப்போது வேண்டுமானாலும் தொடலாம். அது இந்தியப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியின் அடையாளமாகவே கருதப்படும்.
ஆனால் நடிகரின் ரசிகர்கள் சாவு வீட்டுக்கு அவர் தமது ‘மற்றவளை’ அழைத்து வந்ததைப் பற்றிக் கவலைப்படுகின்றனர்.
இதற்கு முன்பெல்லாம் வீடுகளில் இருக்கும் பெருசுகளுடன் பழமையான கருத்துக்களை எதிர்த்து வாதிடுவோம். இப்போது இளம் தற்குறிகளுடன் முட்டிக்கொண்டிருக்கிறோம்.
பகுத்தறிவும் சுயமரியாதையும் தான் நமது ஆயுதங்கள்!
31 மே 2026
No comments:
Post a Comment