ஏங்க மோடி 2014ல் இந்தியாவின் பிரதமரா வரும் போது விஜய் தமிழ்நாட்டின் முதல்வராக கூடாதா? என்கிறார் ஒரு நண்பர்.
அவர் அரசியல் நடிகர். இவரும் அரசியல் நடிகர். இவரும் ஒண்டிக் கட்டை. இவரும் பேட்டி கொடுக்க மாட்டார். இவருக்கு சோசியல் மீடியா துணை. அவருடன் ராம் விலாஸ் பாஸ்வான். இவருடன் திருமா.மன்மோகன் சிங் காலத்தில் நாடு வளர்ச்சி அடைந்திருந்தது. தகவல் அறியும் சட்டம், நூறு நாள் வேலைத்திட்டம், வன உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அவரது நாகரிக அரசியல் வீக்னஸாகப் பார்க்கப்பட்டது.
இடதுசாரிகள் வறட்டு அரசியல் பேசி உறவை முறித்துக் கொண்டார்கள்.
மன்மோகன் சிங்கை மோடி தனிப்பட்ட முறையில் கடுமையாகச் சாடினார்.
ஊழலும் நிர்பயா வழக்கும் மக்களைத் திரட்டப் பயன்பட்டன.
ஊடகங்கள் விலை போயின.
இல்லாத 2ஜி ஊழலை எஸ்.பி. உதயக்குமார் வரை பேசினார்கள்.
மோசடியாலும் துரோகத்தாலும் மோடி ஆட்சி அமைத்தார். காத்துக்கொண்டிருந்த அத்வானி / எடப்பாடி ஓரங்கட்டப்பட்டார்.
அரசனை நம்பி மக்கள் புருசனைக் கைவிட்டார்கள். இல்லாத சொர்க்கத்தை நினைத்து இருக்கிற வீட்டைக் கொளுத்தினார்கள்.
நடுநிலைவாயர்கள் அப்போதும் வியாக்கியானம் பேசினார்கள்.
சரியாத்தானே போய்ட்டிருக்கு!
22 மே 2026
No comments:
Post a Comment