Tuesday, July 28, 2026

ஜென்டில்மேன் கட்சி!

 ஜென்டில்மேன் கட்சி!


திமுக ஆட்சியில் இருந்த போது தவெக நண்டு சிண்டெல்லாம் முன்னாள் முதல்வரையே கண்டபடி திட்டினார்கள். திமுக தீயசக்தி என்று காரணமில்லாமல் வசை பாடினார்கள். சிறுவர்களுக்குப் பணத்தைக் கொடுத்துத் தெருத்தெருவாய்க் கூவ வைத்தனர். ஒருவர் முட்டாள் முதல்வர் என்றே சொன்னார். அப்போது கேட்க ஆளில்லை. முதல்வரே அமைதியாகக் கடந்து போனார். நடுநிலைவாயர்கள் தவெகவிற்கு திமுக அரசியல் எதிரி, அப்படித்தான் விமர்சிப்பார்கள் என்றார்கள். அது தேர்தல் உத்தி என்றார்கள்.

கரூர் சம்பவத்தில் தவெக நடத்திய சேதாரத்தை தாமே முன்னின்று முன்னாள் முதல்வர் சரி செய்தார். அவர் பத்து லட்சம் இழப்பீடு கொடுத்ததால் விஜய் 20 லட்சம் கொடுத்தார். ஓடிப்போனவனைப் பாவம் என்று ரூட் மாஃபியா ஒப்பாரி வைத்தது. குடல் பிதுங்கி செத்த குழந்தைகளைப் பார்த்து அழுத பள்ளிக்கல்வித்துறை மந்திரியைக் கேலி செய்தனர். உடனடியாக உதவி செய்தவரை இன்னும் சந்தேகப்படுகின்றனர். அவருக்கு முன்பே போன அதிமுக பிரமுகரை சட்டமன்ற உறுப்பினராகவே தேர்ந்தெடுத்து விட்டனர்.

பாட்டிலுக்குப் பத்து ரூபா என்று பாட்டுப் பாடினார் விஜய். இன்னும் அந்த வசூல் நடந்து கொண்டிருக்கறது. அந்த அவதூறுக்கு என்ன பதில்? இப்போது அந்தப் பணம் எங்கு போகிறது? டாஸ்மாக் ஊழியர்களின் விளக்கம் இப்போது மட்டும் ஏன் கோரப்படுகிறது? அவர்கள் எப்படி திடீர் வில்லன்கள் ஆனார்கள்?

முன்னாள் முதல்வரோ பார்த்துப் பார்த்து நலத்திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். வாட் எ ஜென்டில்மேன் என்றனர் எல்லோரும்.

கடைசியில் நடிகனுக்கு நூற்று எட்டு சீட்டு கிடைத்தது. நம்மைப் போன்ற ஆதரவாளர்களுக்கு நெஞ்சு வலி வந்தது தான் மிச்சம்.

தவெகவின் கண்மூடித்தனமான தாக்குதலும் பொய்ப்பிரச்சாரமுமே இந்த முடிவுக்குக் காரணம் என்கின்றனர் விற்பன்னர்கள். தவெகவிற்கு சரியான பதிலடியை திமுக தரவில்லை என்று இன்று அதே நடுநிலைவாயர்கள் விளம்புகின்றனர்.

இப்போது அ ராசா தமது மனக்குமுறலை, வெளிப்படுத்தினால் அதே முன்னாள் முதல்வர் , கட்சித் தலைவராக தமது கட்சியினரையே கண்டிக்கிறார். இன்னொரு ஆள் ஒரு தலித்தை விட்டு இன்னொரு தலித்தைத் திட்டுகிறதா திமுக தலைமை என்கிறார்.

கிரிக்கெட் மைதானத்தில் வீரர்கள் ஒருவருக்கொருவர் திட்டிக்கொள்வது தமது உணர்ச்சியை வெளிப்படுத்தவே. உணர்ச்சி முக்கியமல்லவா? அவர்களும் மனிதர்கள் தானே?

இரண்டு வருத்தம் திமுகவினருக்கு இருக்கலாம் / இருக்க வேண்டும். ஒன்று நல்லாட்சி கொடுத்தோம், ஒரு புதுக்கட்சியிடம் தோற்றுவிட்டோமே என்று. இரண்டாவது, உடன் இருந்தவர்கள் தோற்கடித்தவன் பின்னால் போனது. அவர்களுக்கு இந்தச்சூழலிலும் கோபம் வரக்கூடாதா?

டிஃபன்ஸ் / தற்காப்பு ஆடுவதே தான் திமுகவின் ஒழுங்கா? அஃபன்ஸ் / அடித்து ஆடவே கூடாதா?

இப்போதும் எல்லோரும் முன்னாள் முதல்வரை வாட் எ ஜென்டில்மேன் என்கின்றனர்.

உதயநிதி கூடத்தான் ஜென்டில்மேனாக இருக்கிறார். கனிமொழியும் அப்படித்தான். ஆனால் மற்ற கட்சிகளுக்கு அது வராதா?

அதெப்படி திமுக நன்மை செய்தால் அது அவர்களது கடமை. தமது வருத்தத்தை வெளிப்படுத்தினால் அது அத்துமீறல். அ ராசாவை எத்தனை முறை அடிப்பார்கள்? அவர் வீரியமாகக் கொள்கையை விளக்கினால் வாக்கு விழாது என்கின்றனர்.

அ ராசா இப்படி ஒரு விமர்சனம் செய்யும் போது அவரை தலித் என்று பார்ப்பதா, திமுக காரர் என்று பார்ப்பதா? உங்கள் வசதிப்படியா? இது காலம் அவர் சமூகநீதி அரசியலுக்கு பகுத்தறிவுக்கு ஆற்றிய பணிகளை இந்த ஒரு விமர்சனத்தால் விலக்கி வைப்போமா?

அ ராசா, திமுகவில் உயர்ந்த பொறுப்பில் இருக்கிற திராவிட இயக்கச் சிந்தனையாளர். பிறப்பால் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். 2ஜி தொழில்நுட்பத்தை ஏழைகளுக்குக் குறைந்த விலையில் கொண்டு சேர்த்ததற்காகத் தண்டிக்கப்பட்டவர். ஒரு வரலாற்றுப் பெட்டகம்.

அவருக்கு பெனிஃபிட் ஆஃப் டவுட் (benefit of doubt) ஏன் கொடுக்கப்படுவதில்லை? ஐம்பது பேரைக் கொன்றவனைக் கொண்டாடுவோருக்கு இந்த நியாயம் எப்படித் தெரியும்?

எத்தனை நாகரீக முட்டுக்கட்டைகள்!

https://www.google.com/imgres?imgurl=https%3A%2F%2Fi.ytimg.com%2Fvi%2FKMwuM0PuWKI%2Fmaxresdefault.jpg&tbnid=P-ht_osko3N7QM&vet=1&imgrefurl=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DKMwuM0PuWKI&docid=gk_hy7ycmeBH-M&w=1280&h=720&itg=1&hl=en-IN&source=sh%2Fx%2Fim%2Fm1%2F4&kgs=95ee43e2d52a3faf&shem=rimspwouoe

Amudhan R P

22 மே 2026

No comments:

Post a Comment

திமுகவின் அறிவுச்சூழல்!

  திமுக ஆட்சி காலத்தில் அரசு சார்பாக நடத்தப்பட்ட இலக்கியத் திருவிழாக்களில் இடதுசாரிகள், அம்பேத்கரியவாதிகள், தமிழ்த்தேசியவாதிகள், பெண்ணியவாதி...