என்ன மாற்றம் நடந்திருக்கிறது?
அனுபவமற்றவர்கள் ஒரு நடிகர் தலைமையில் ஆட்சி அமைத்திருக்கின்றனர்.
கூடவே காங்கிரசும், விசிகவும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டணி மந்திரி சபையில் இருக்கின்றனர்.
பார்ப்பனர்கள் இருவர் மந்திரிகள்.
திமுக கூட்டணி உடைந்திருக்கிறது.
சென்னையில் திடீர் மி்ன்வெட்டு தவெகவிற்கு வாக்களித்த எளிய மக்களை வாட்டி வதைக்கிறது.
அரசாங்கமற்ற குழப்பநிலை நிலவுகிறது.
எந்த இன்ஃபளுயன்சர்ஸ் ரீல்ஸ் போட்டு மக்களை மயக்கினார்களோ அவர்களே நல்லாட்சி நடப்பதாக மேலும் வதந்திகளைப் பரப்புகின்றனர்.
மக்கள் தெருவில் இறங்கிப் போராடுகின்றனர்.
தவெக கட்சியினர் ஆலோசனை, மேற்பார்வை என்ற பெயரில் ஆட்சி அதிகாரத்தில் அத்துமீறல் செய்கின்றனர்.
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு மேல் பணம் வாங்குவது ஊழியர்கள் தான் என்றும் அதற்கு நிர்வாகக் காரணம் தான் பின்னணி என்றும் நீதிமன்ற ஆணையே அதை ஆதரிக்கிறது என்றும் தவெக மந்திரி சொல்கிறார். ஆனால் பாட்டிலுக்குப் பத்து ரூபாய் நடிகர் விஜய் பிரச்சாரம் செய்தது பொய் என்று யாரும் ஒத்துக்கொள்ளவில்லை.
பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன.
தமிழ்நாட்டு அரசியல் அறிவுத் தரம் குறைந்திருக்கிறது.
இளைஞர்கள் வழக்கம் போல கலர் கலராக உடையணிந்து, ஜங்க் உணவைத் தின்றபடி, வதந்திகளைப் பரப்பியபடி, தமது தற்குறி வாழ்க்கையைத் தொடர்கின்றனர். பெற்றோர்கள் கர்வத்தோடு இதை ரசிக்கின்றனர்.
ஆதவ் அர்ஜுனா என்ற தரகர் தான் அரசின் பிரதிதிதியாக வெளிப்படுகிறார்.
வழக்கம் போல விஜய் ஒரு பட்டத்தரசர் போல தள்ளியே நிற்கிறார். வேடிக்கை பார்க்கிறார்.
திமுக வெறுப்பாளர்கள் வெளிவந்து மேலும் வெறுப்பைக் கக்குகின்றனர்.
வன்னியரசு மந்திரி ஆகியிருக்கிறார். அது மட்டும் தான் ஆறுதல்.
அமுதன் ஆர்.பி.
ஆவணப்பட இயக்குநர்
சென்னை
24 மே 2026
No comments:
Post a Comment