நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது இன்னொரு பாடத்தில் ஒரு மாணவர் இருந்தார். உயர்சாதிக்காரர், வசதியானவர், ஸ்டைலாக இருப்பார், ரசிகைகள் அதிகம்.
அவருக்கு ஒரு திருமணமான பெண் மீது காதல். அந்தப் பெண் சம்மதிக்கவில்லை. அவர்களுக்குள் என்ன நடந்தது என்று தெரியாது. ஒரு நாள் அந்தப் பெண்ணின் 10 வயது மகனை இந்த நாயகன் கடத்திக் கொண்டு போய்விட்டார். அச்சிறுவனை கட்டிவைத்து அடித்து, பட்டினி போட்டு, பாலியல் பலாத்காரம் செய்து அந்தப் பெண்ணுக்கு 'பாடம்' புகட்டினார்.
இந்தச் செய்தி வெளியில் வந்து, நாயகனின் குடும்பப் பின்னணி காரணமாக அச்சம்பவம் ஊத்தி மூடப்பட்டது.
நான் சொல்லவந்தது அதுவல்ல.
அந்த நாயகனின் இந்த சாகசம் பற்றி எங்கள் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் அப்போது என்ன பேசிக்கொண்டார்கள் தெரியுமா?
1) நம்பமுடியவில்லையே, இப்படியெல்லாமா நடக்கும்? - சந்தேகம்
2) அய்யோ, இவன் இப்படிப்பட்டவனா? - பயம்
3) இவ்வளவு துணிச்சல் மிக்கவனா? தனக்கு வேண்டும் என்றால் இவ்வளவு தூரம் ரிஸ்க் எடுப்பானா? - ரசிப்பு
அவரை யாரும் தண்டிக்கவில்லை. இடைநீக்கம் கூட செய்யப்படவில்லை. ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இறுதியில் அந்த நாயகன் முதுகலைப் பட்டம் பெற்று நிம்மதியாக வெளியேறினார்.
இப்படித்தான் மோடியை இந்தியர்கள் எதிர்கொள்கின்றனர்.
2002 குஜராத் இனப்படுகொலை பற்றி என்ன தகவல் வெளியே வந்தாலும் அதை மறைக்க மோடி என்ன சட்டமீறல்கள் புரிந்தாலும் அதைக் கண்டு மிரள்வது, அல்லது ஒதுங்குவது, அல்லது ரசிப்பது என்பதாகவே இந்தியர்களின் எதிர்வினை இருந்தது.
சாகசக்காரர்களைப் பார்த்து மிரள்வது, ஒதுங்குவது அல்லது ரசிப்பது போலவே நாம் நடந்து கொண்டிருக்கிறோம்.
மோடிக்கு எதிரான ஒரு உறுதியான நிலைப்பாட்டை யாருமே அன்று எடுக்கவில்லை.
இன்னும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் குறைந்த பட்சம் இருக்கப்போகிறார்.
என்னவெல்லாம் நடக்கும் என்பதை நம்மால் கணிக்கக்கூட முடியாது.
அத்தனை நம்பமுடியாத, அச்சமூட்டக்கூடிய வரலாறு அவருடையது.
No comments:
Post a Comment