Tuesday, December 17, 2019

17வது சென்னைத் திரைப்படவிழாவில் ஒரு பார்ப்பன மிரட்டல்!



1
17வது சென்னை திரைப்பட விழாவை தேவி தியேட்டரி்ல் ஒருங்கிணைப்பு செய்யும் நபர் பார்வையாளர்களை ஆட்டு மந்தையைப் போல நடத்துவது எது? அவரது உயர் சாதியா, மேட்டுக்குடி வர்க்கமா?
எல்லாம் தெரிந்த கம்யூனிஸ்டுகள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். அவர்கள் தான் பார்ப்பனர்களைக் குறை சொல்லாதே என்று பாடம் எடுப்பார்கள்.

2
ஒரு பார்ப்பனர், சென்னைத் திரைப்படவிழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தேவி தியேட்டரில் பார்வையாளர்களை அக்ரஹாரத்திற்குள் நுழைந்த சூத்திரர்களை விரட்டுவது போல விரட்டிக் கொண்டிருக்கிறார். இதைக் கேட்பாரில்லையா? என்று தான் புலம்ப ஆசை.
ஆனால் கம்யூனிஸ்ட் தோழர்கள் 'பார்ப்பனர்' என்று சொல்லாதே என்று பல முறை என்னை ஏற்கனவே மிரட்டியிருப்பதால், எப்படியும் இரண்டாவது சுற்றில் அவர்களுக்கு தான் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அதை முதலிலேயே செய்துவிட்டேன்.
இன்று நான் சாப்பிட்ட பீப் பிரியாணி மீது ஆணை. இது தான் உண்மை. எனக்கென்ன தோழர்களோடு வாய்க்காத் தகராறா?
மதுரை அருகே வாடிப்பட்டியில் ஒரு புகழ்பெற்ற கத்தோலிக்கக் கோயில் இருக்கிறது. அங்கும் இப்படித்தான் சில மூத்த கன்னியாஸ்திரிகள் பக்தர்களை மிரட்டிக் கொண்டேயிருப்பார்கள். அந்த இரைச்சலும் திரைப்படவிழாவில் அரங்கிற்குள் ஒலிபெருக்கியில் மேற்படியாரின் உருட்டல்களும் ஒத்திருந்தன.
உங்களுக்கு நாங்க படம் போடறதே பெரிய விஷயம், ஒழுங்கா நடங்கடா என்றே அர்த்தம் கிடைத்தது.

3
ஒரு பார்ப்பனர், சென்னைத் திரைப்படவிழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தேவி தியேட்டரில் பார்வையாளர்களை அக்ரஹாரத்திற்குள் நுழைந்த சூத்திரர்களை விரட்டுவது போல விரட்டிக் கொண்டிருக்கிறார்.
மதுரை அருகே வாடிப்பட்டியில் ஒரு புகழ்பெற்ற கத்தோலிக்கக் கோயில் இருக்கிறது. அங்கும் இப்படித்தான் சில மூத்த கன்னியாஸ்திரிகள் பக்தர்களை மிரட்டிக் கொண்டேயிருப்பார்கள். அந்த இரைச்சலும் திரைப்படவிழாவில் அரங்கிற்குள் ஒலிபெருக்கியில் மேற்படியாரின் உருட்டல்களும் ஒத்திருந்தன.
உங்களுக்கு நாங்க ஒலகப்படம் போடறதே பெரிய விஷயம், ஒழுங்கா இருங்கடா, ஞான சூன்யங்களா என்றே அர்த்தம் கிடைத்தது.
நெளிந்தபடி படம் பார்க்கத் தொடங்கினேன்.

4
கம்யூனிஸ்டுகள் பார்ப்பனர்களுக்கு ஆதரவானவர்கள் என்று நான் சொன்னதற்கு கோபம் கொள்ளும் தோழர்கள், 10% இடஒதுக்கீட்டை மோடி அரசு உயர் சாதி ஏழைகளுக்கு வழங்கிய மசோதாவை மார்க்ஸிஸ்ட் கட்சி ஏன் ஆதரித்தது என்று சொல்லமுடியுமா?
என்னைக் கூட்டமாக வந்து தாக்குவதால் உண்மையை மறைக்க முடியுமா?
நான் பார்ப்பனர்களை விமர்சிக்கும் போதெல்லாம் என்னை எதிர்கேள்வி கேட்போரே இப்போதும் என் (திரைப்பட விழா அனுபவம்) கருத்திற்கு எதிராகப் பதிவிடுவது நகைமுரண்.
எனது பார்ப்பன எதிர்ப்பு கருத்துக்களுக்கு சங்கிகளை விட கம்யூனிஸ்டுகளே மறுப்பு அதிகம் தெரிவித்திருக்கின்றனர். சங்கிகள் தோழர்களிடம் தோற்கும் இடம் இது தான். ஆதாரம் என் முந்தைய பதிவுகளில் நீங்கள் பார்க்கலாம்.
திரைப்படவிழாவில் ஒரு பார்ப்பனர் அவமரியாதையாக பார்வையாளர்களை நடத்துகிறார் என்பதைப் பதிவிட நான் நினைத்ததும் இதற்கு முன் தோழர்கள் என்னைத் தாக்கி எழுதியதை, என்னைத் தாக்கி எழுதியவர்களுக்கு லைக் இட்டதை நினைக்காமல் இருக்கமுடியவி்ல்லை. அதனாலேயே எனது தயக்கத்தை வெளிப்படுத்தினேன்.
நான் சாதி பற்றித் தொடர்ந்து படங்கள் எடுத்தும், திரையிட்டும், விவாதித்தும் வருகிறேன். அதன் நீட்சியாகவே என் விமர்சனங்களை வைக்கிறேன். யார் மீதும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இல்லை.
எதிரிகளைப் போரிடுவதோடு உடன் பயணிப்போரின் போதாமையையும் சுட்டுதல் முக்கியம்.
இந்தப் பதிவுக்கும் அவதூறுகள், கேலி, இடிப்பு, வசைமொழிகள் வரக்கூடும், என் நேர்மையை, என் பின்னணியைப் பழித்துப் பதிவுகள் வரலாம். திசை திருப்பும், திரித்து எழுதும் கருத்துகள் வரலாம்,
நான் பெரியார் தொண்டன். அதற்கெல்லாம் சோர்ந்து போகமாட்டேன்.

5

இப்போது கூட ஒரு பார்ப்பனப் பெண் எனக்கு எதிராகத் துவேஷத்துடன் வசை பாடியிருப்பதில் பல இடதுசாரிகள் லைக் இட்டிருக்கின்றனர். பார்ப்பனர் மீதான அபரிதமான விசுவாசம், சாதி மீதான மயக்கம் நம்மில் பலரை வாட்டுகிறது. சாதியை ஒரு சித்தாந்தமாக எதிர்க்காமல் அதன் கொடுமையை மட்டும் எதிர்ப்பதில் இருக்கும் பிரச்சனை தான் இது. இந்தியாவில் சாதி ஆதிக்கத்தின் வேர் பார்ப்பனியம் தான். அதுவே சங்கி அரசியலில் வேரும் கூட. இப்போது நாம் எதிர்க்கும் மோடி அரசாங்கத்தின் வேரும் அதுவே. இதில் நாம் எப்படி தயக்கம் காட்டலாம்?
இதற்கும் பலர் கும்பலாக (mob) வந்து என்னைச் சாடலாம். இருந்தாலும் உண்மையைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

No comments:

Post a Comment