Friday, June 22, 2018

அம்பேத்கர் எனக்கு! பெரியார் உனக்கு!

தலித் பகுஜன் ஒற்றுமை சாத்தியமா?
நாங்கள் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் தொடங்கிய போது தலித் தோழர்கள் பலர் கடுமையாக அதை எதிர்த்தனர். நீங்கள் எப்படி அம்பேத்கரையும் பெரியாரையும் சேர்க்கலாம் என்று வெளிப்படையாகக் கேட்டனர்.
சில தமிழ்தேசவாதிகள் இன்னுமா பெரியார், அம்பேத்கர்னு பேசிட்டிருக்கீங்க? காலம் மாறிப்போச்சு தோழர் என்று எங்களைப் பரிதாபமாகப் பார்த்தனர்.
நாங்கள் நடத்திய பல நிகழ்ச்சிகளில் பேசவந்த தலித் சிந்தனையாளர்கள் பலர் பெரியார் பெயரை உச்சரிக்கவே இல்லை.
பெரியாரை தலித் சிந்தனையாளர்கள், போராளிகள் புறக்கணிப்பது யதேச்சையானதல்ல.
பெரியாரைச் சேர்த்தால் இடைச்சாதிக்காரன் வருவான். நமக்கு யோசனை சொல்வான். ஏற்கனவே அவனிடம் பட்டது போதாதா என்கிற மனநிலை.
நீ பெரியாரை மட்டும் பேசு. அம்பேத்கரைப் பேசாதே என்கின்றனர்.
நானும் அம்பேத்கரை மட்டும் பேசுகிறேன். பெரியார் எங்களுக்கு வேண்டாம் என்கின்றனர்.
உங்க திருவிழாவும் வேண்டாம், உங்க பொங்கச்சோறும் வேண்டாம் என்கிற நிலை.
அதே போல பல பெரியார்வாதிகள் இன்னும் "அவுங்க அப்படித்தான்" என்கின்றனர். "நாங்க அவுங்களுக்குப் பண்ணாததா?" என்றும் மார் தட்டுகின்றனர்.
இதுக்கு என்ன தான் தீர்வு?

No comments:

Post a Comment