Friday, June 22, 2018

செல்லாக்காசு மோசடியில் நடந்தவை!

பணமதிப்பிழப்பு அறிவிப்பும் மக்களுக்கு மோடி வைத்த ஆப்பும்! 
1) திடீரென்று இதை அறிவித்தத்தால் உபி மாநிலத்தேர்தல் செலவுக்குக் கட்டுக்கட்டாகப் (பழைய) ரூபாய்களை வைத்திருந்த சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. அது தமது கட்சிக்கு முதலிலேயே தெரிந்ததால் சிக்கல் வராமல் நோட்டை மாற்றி, தயாராக இருந்து காத்துக்கொண்டது.
2) தமது நண்பர்களான, ஆதரவாளர்களான வியாபாரிகள், முதலாளிகள் மற்றும் பாஜக பிரமுகர்கள் கையிருப்பில் வைத்திருந்த கருப்புப்பணத்தை வெள்ளை ஆக்க உதவியது, அதன் மூலம் பாஜகவுக்கு பெர்சண்டேஜ் கமிஷன் அடித்தது, 900 கோடி நன்கொடை சேர்த்தது, உலகிலேயே பெரிய அரசியல் கட்சி அலுவலகத்தை டெல்லியில் கட்டியது இப்படி பலான, பலான ஜில்மாக்கள் செய்தது.
3) இதன் மூலம் கருப்புப்பணத்தை, தீவிரவாதத்தை, கள்ளநோட்டை ஒழிக்கலாம் என்று படித்த முட்டாள்களை நம்ப வைத்து அல்வா கொடுத்தது.
4) ஏழை பாழைகளை வங்கிகளுக்கு அலையவிட்டு சாக அடித்தது.
5) இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபியை 2% குறைத்து 2 லட்சம் கோடி நாட்டுக்கு நட்டம் ஏற்படுத்தியது.
6) ஆறுமாத காலத்திற்கு நோட்டுப் புழக்கம் இல்லாமல் எந்தத் தொழிலும், வியாபாரமும் செய்யவிடாமல் எல்லோரது வயிற்றிலும் அடித்தது.
7) டிஜிடல் பொருளாதாரம் என்கிற பெயரில் நமது பணத்தை வங்கிகளும், பேடிஎம் போன்ற நிறுவனங்களும் கொள்ளை அடிக்க உதவியது.
8) எதையாவது செய்றார் மோடி என்று எல்லோரையும் ஸ்டண்ட் அடித்து, நம்ப வைத்துக் கழுத்தை அறுத்தது.
9) சும்மா கிடந்த வங்கி நிர்வாகிகளை ரவுடிகளாக்கி, எல்லோரையும் மிரட்ட வைத்தது, ஊழியர்களுக்கு வேலைப்பளுவை அதிகமாக்கி மக்களிடம் இருந்து அவர்களைப் பிரித்தது, அரசுக்கு விசுவாசியாக்கி, தொழிற்சங்க அரசியலைக் காய் அடித்தது, அவர்களையும் கருப்பை வெள்ளையாக்கும் ஆட்டத்தில் சேர்த்து எல்லோரையும் ஊழல் செய்ய ஊக்குவித்தது.
10) அடுத்து எதைத் தடை செய்வாரோ என்று எல்லோரையும் ஒரு மன உளச்சலுக்கு ஆளாக்கியது, அதைக் கொண்டா, இதைக் கொண்டா என்று மக்களை மிரட்டி உருட்டும் கலாச்சாரத்தை இயல்பாக்கியது.
என் அறிவுக்குப் பட்டது இப்போதைக்கு இவ்வளவு தான்!

No comments:

Post a Comment