Friday, June 22, 2018

ரஜினி ஒரு பாசிஸ்டா?

ரஜினி - ஆண் ஜெயா! 


ஆரம்ப காலத்தில் ரஜினி நடித்த கதாபாத்திரங்கள் (ஏழை, உதிரி, சாமி கும்பிடாதவர், உழைப்பாளி, ஆங்கிலம் பேசத்தெரியாதவர், கருப்பு நிறம்) காரணமாக தமிழர்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்று நட்சத்திர அந்தஸ்து பெற்றார். 
அப்போதே சஞ்சய் காந்தியை பிடிக்கும் பால் தாக்கரேவைப் பிடிக்கும் என்று பிதற்றிக்கொண்டிருப்பார்.
ஜெயலலிதாவை எதிர்த்தது கூட ஆண்திமிர் தான் காரணமே ஒழிய, ஊழல் எதிர்ப்பல்ல. ஜெயாவிற்கு எதிராக மன்னன் என்கிற படத்தையே எடுத்து தனது ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். 
வெளிப்படையாக திருநீறு பூஷி ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இந்து மதத்தை யதார்த்தமாக்கியவர் ரஜினி. 
90களுக்குப் பிறகு ரஜினியின் உணமையான முகம் வெளிப்பட்டது. ஆணாதிக்கம், நிலபிரபுத்துவம், ஆண்டான் அடிமை, முதலாளித்துவம், பார்ப்பன அடிமை மனநிலை ஆகியவற்றை வெளிப்படையாக தனது படங்களில் புகுத்த ஆரம்பித்தார். 
இந்துக்கடவுளர்களின் பெயர்களில் படங்கள் எடுக்க ஆரம்பித்தார். ஆன்மிகம், பக்தி என்று தனது அப்பாவி ரசிகர்களை பகுத்தறிவற்ற பாதைக்கு அழைத்துப்போனார். 
சோ ராமசாமி எனும் இந்துத்தவ பரப்புரையாளருடன் நட்பு பாராட்டினார். அவரை தனது குரு என்று பெருமைப்பட்டுக்கொண்டார். 
தமிழர்களுக்கு எந்தவிதத்திலும் நேர்மறையான பங்காற்றாத, அதே நேரத்தில் தமிழ் ரசிகர்களின் பெரும் மதிப்புப் பெற்ற ஒரு தந்திரக்காரர். தேர்ந்த வியாபாரி. 
அவ்வப்போது ஆங்கிலத்தில் பேசுவார்; எளிமையாக இருப்பதாக ஏமாற்றுவார், மேக் அப் போடாமல் வெளிவருவதை ஒரு தனிநபர் பிரச்சார உத்தியாகக் கையாண்டார். 
ஜெயாவும், கலைஞரும் செயல்பாட்டில் இருக்கும் வரை வாலை ஆட்டாதவர். இப்போது ஆள் இல்லாத வீட்டில் துள்ளி விளையாடுகிறார். 
பாஜகவின் அரசியலான இந்துத்துவ அரசியலுக்கு மிகவும் பொருத்தமானவர். ஜெயா விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப முயல்கிறார். 
தமிழர்களின் நெருக்கடி காலம் தொடர்கிறது. தமிழர்களின் எதிரி பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. 
ரஜினி ஒரு பெண் ஜெயா! நிராகரிக்கப்படவேண்டியவர். தோற்கடிக்கப்பட வேண்டியவர். 
தான் ஒரு பாசிஸ்ட் என்பதை தூத்துக்குடியிலும் சென்னையிலும் பேசியதன் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். 
தமிழர்களாகிய நாம் பல போராட்டங்களுக்கு நடுவில் அங்குலம் அங்குலமாக முன்னேற முயற்சிக்கிறோம். 
ரஜினி நமக்கு ஒரு தடை தான். உடைத்தெறியப்படவேண்டிய தடை.

No comments:

Post a Comment