Wednesday, March 16, 2016

உண்மையில் இடைச்சாதி ஆண் தம் பெண்களைப் பார்த்து அச்சப்படுகிறான்.

ஆணவக் கொலைகள் பெண்களுக்கு எதிரான வன்முறையும் கூட.
இது சாதி ஆதிக்கம் மட்டும் அல்ல. ஆண் ஆதிக்கமும் கூட.
இடைச்சாதிப் பெண் தன் துணையைத் தாமே தேடக் கூடாது என்று அவளது உடலை, உணர்வை, தேர்வை அவளது வீட்டு ஆண்கள் (தகப்பன், தாத்தா, சகோதரன், மாமா, சித்தப்பா) கட்டுப்படுத்தும் செயல்.
இடைச்சாதி ஆண்கள் தலித் பெண்களைக் காதலித்தாலோ, திருமணம் செய்தாலோ இதே வன்முறை நிகழ்வதில்லை.
இடைச்சாதிப் பெண்கள் தலித் ஆண்களைக் காதலித்தால், திருமணம் செய்து கொண்டால் தான் இந்த வன்முறை.
உண்மையில் இடைச்சாதி ஆண் தம் பெண்களைப் பார்த்து அச்சப்படுகிறான்.
அவளது வளர்ச்சி, அறிவு, உடல் கண்டு அஞ்சுகிறான்.
அவளைக் கட்டுப்படுத்த முனைகிறான்.
ஆனால் அவள் கல்வி பெற்று, வெளியுலக அறிவு பெற்று வெளியேறுவதை அவனால் தடுக்க முடியவில்லை.
இடைச்சாதி ஆண்கள் தம் வீட்டு பெண்களுக்கு ஏற்றார் போல வளரவில்லை.
வெட்டி வீராப்பு பேசிக்கொண்டு திரிகின்றனர். முரட்டுத் தனாமாக எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கின்றனர்.
நாங்க மாட்டுக்கறி சாப்பிடுவோம். எங்களுக்கு நல்லா எந்திரிக்கும். அதனால தான் எங்க மேல எல்லாப் பொம்பளைகளுக்கு ஒரு ஈர்ப்பு என்று ஒரு தலித் ஆண் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது.
நாங்க கஷ்டம் தெரிஞ்சவிங்க, உழைக்கிற வர்க்கம். மரியாதையா நடந்துக்குவோம். அதனால எல்லாருக்கும் எங்களைப் பிடிக்கும் என்றார் இன்னொருவர்.
எங்களுக்கு ஒரு வாழ்க்கையில ஒரு நோக்கம், லட்சியமிருக்கு. தன் முனைப்பு இருக்கு. அதனால எங்க மேல அந்த பெண்களுக்கு ஈர்ப்பு வருது என்றார் இன்னொருவர்.
உண்மையில் இது ஒரே சாதி ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடக்கிற போட்டி.
இடைச்சாதி ஆண்கள் தம்மை, தம் அறிவை, அனுபவத்தை, வசீகரத்தை இன்னும் வளர்த்துக்கொள்ளவேண்டும்.
அரிவாளை வைத்து சமன் செய்ய முடியாது.

No comments:

Post a Comment