எனது சமீபத்திய ஆவணப்படங்கள்:
கதிர்வீச்சுக்கதைகள் பாகம் 1: மணவாளக்குறிச்சி
54 நிமிடங்கள்; 2010
அணுசக்தியின் ஆபத்துக்களைப் பற்றிப் பேசும் போது அணு உலைக்குத் தேவையான யுரேனியம் அல்லது தோரியம் தோண்டி/பிரித்தெடுப்பது பற்றி விவாதிப்பது அவசியம். கன்னியாகுமரி மாவட்டத்தில் மணவாளக்குறிச்சி அருகே சின்னவிளை, பெரியவிளை உட்பட்ட ஆறு கடற்கரையோர கிராமங்களில் இந்திய அணுசக்தித் துறையின் இந்திய அருமணல் ஆலை கடற்கரை மணலில் இருந்து தோரியம் எடுக்கிறது. 1964ல் இருந்து நடத்தப்படும் இந்த ஆலையால் கடல் அரிப்பும், கடல் அடியும், கதிர்வீச்சும் அதிகரிக்கவே மீனவர்கள் அதை எதிர்த்துப் போராடினர். மீனவர்களையே மணல் அள்ள வைத்து அவர்களுக்கு மாதச் சம்பளமும் கொடுத்து இந்திய அருமணல் ஆலை அவர்களையும் மணல் அள்ளும் பணிக்கு பாதுகாவலாக்கியது. இது வரை இப்பகுதியில் அதிகரித்த கதிர்வீச்சால் நூற்றுக்கணக்கானவர்கள் விதம் விதமான புற்று நோயால் பாதிக்கப்பட்டு மடிந்து போயிருக்கின்றனர். அப்பகுதியில் ஊனமுற்றவர்களும், மூளை வளர்ச்சியற்ற பிள்ளைகளும் அதிகம். குறைப்பிரசவமும், தோல் நோயும் கதிர்வீச்சால் என்ன விளையும் என்பதற்கு வெளிப்படையான எடுத்துக் காட்டாக விளங்குகிறது மணவாளக்குறிச்சி.
28 நிமிடங்கள்; 2011
கதிர்வீச்சுக்கதைகள் பாகம் 3: கூடன்குளம்
80 நிமிடங்கள்: 2012
கூடன்குளம் போராட்டம் சமகால இந்திய வரலாற்றிலேயே இல்லாத அபூர்வமான போராட்டம் என்று எனது படத்தைப் பார்த்த பூனாவின் மூத்த தொழிற்சங்கத் தலைவர் பாலசந்திர கேர்க்கர் கூறியது மிகையல்ல. எத்தனை தயாரிப்பு வேலைகள் நடந்திருக்க வேண்டும் இப்படி ஒரு நீண்ட போராட்டம் நடைபெறுவதற்கு என்று பல தமிழர் அல்லாத சிந்தனையாளர்கள் பாராட்டுகின்றனர். போராட்டத்தை நான் படம் பிடிக்கையில் பலரிடம் நான் இதைப் பற்றிக் கேட்ட போது தலைமை தான் காரணம் என்று மனதாரப் புகழ்ந்தனர் உள்ளூர் மக்கள். நாடார்களையும் மீனவர்களையும் பிரிக்கும் சக்திகளைத் தூக்கி எறிந்தது தான் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றனர். இந்தப் போராட்டம் ஒரு அணு உலைக்கு மட்டும் எதிரானது அல்ல. ஒட்டு மொத்த வளர்ச்சி மாதிரிக்கே எதிரானது.
No comments:
Post a Comment