Friday, February 2, 2024

விஜய் ஆரம்பித்த இக்கற்ற கட்சி!

தமிழர் அரசியலில் இன்னும் ஒரு நடிகர்!

அமுதன் ஆர்.பி.


நடிகர் விஜய்யின் அரசியல் வரவைக் கொண்டாடும் பலருக்கு தமிழ்நாட்டு அரசியல் பற்றி புரிதல் இல்லை என்று சொல்லலாம் அல்லது தமிழ்நாட்டு அரசியல் மீது (பார்ப்பனர்கள் உருவாக்கிய ) வெறுப்பு என்று சொல்லலாம்.
தமிழ்நாட்டின் தனித்துவத்தை எடைக்குறைப்பு செய்ய நினைக்கும் சக்திகள் தான் தொடர்ந்து அந்த நடிகர் வருவாரா இந்த நடிகை வருவாரா என்று பரப்புரை செய்கின்றனர்.
தமிழர்களுக்கு அரசியல் அறிவு இல்லை, அவர்கள் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள், காசுக்கு வாக்களிப்பவர்கள், சினிமாவுக்கு மயங்குபவர்கள், குடிப்பவர்கள் என்று நம்மைத் தொடர்ந்து மட்டம் தட்டும் வேலைகளும் சதிகளும் நடக்கின்றன.
இந்தியாவிலேயே அதிகம் வறுமையைக் குறைத்த மாநிலம் என்றோ அதிகத்தொழிற்சாலைகள் உள்ள மாநிலம் என்றோ அதிக ஆட்டோமொபைல் உற்பத்தி செய்கிற மாநிலம் என்றோ அதிக மருத்துவர்கள் இருக்கிற மாநிலம் என்றோ அதிகப் பெண்கள் வேலைக்குப் போகிற, அதிக அரசுப் பேருந்துகள் ஓடுகிற, கல்லூரிக்குப் போவோர் விகிதம் அதிகம் இருக்கிற மாநிலம் என்றோ இவர்கள் சொல்லமாட்டார்கள்.
மிகக்குறைவான ஆறுகள், ஒரே ஒரு பருவமழைக்காலம் ( அது கூட புயலாகத் தான் தாக்கும்) இந்தியாவின் தலைநகரில இருந்து வெகு தூரம் என பல எதிர்மறை அம்சங்கள் இருந்தும் கூட நாம் வளர்ந்துள்ளோம். இது ஒரு கூட்டு முயற்சி மற்றும் வெற்றி.
தமிழ்நாட்டு மக்கள் மதநல்லிணக்கம், தமிழ்ப்பற்று, பெண்கள் சுதந்தரம், பார்ப்பனர் அல்லாத பக்தி, முன்னேறும் உத்வேகம், பல பண்பாடுகளுடான அறிமுகம், பெரிதான வன்முறையற்ற வாழ்க்கை முறை, கல்வியில் ஆர்வம், இந்தியாவை எட்ட நின்று ஆதரிக்கும் அளவான தேசப்பற்று, எளிமை, அந்நியர்களை அரவணைக்கும் பெருந்தன்மை கொண்டவர்கள்.
வள்ளுவர், பண்டிதர், வள்ளலார், சிங்கார வேலர், சிதம்பரனார், பெரியார், அண்ணா, கலைஞர் மாதிரியான அறிஞர்கள் வாழ்ந்த, வேலை செய்த நிலம் இது.
பெரியாரிய, அம்பேத்கரிய, மாரக்சிய, தமிழ்த்தேசிய, பெண்ணிய, சூழலியல் மற்றும் பாலியல் சிறுபான்மையினர் அரசியற் கொள்கைகள் நம்மை வழிநடத்துகின்றன அல்லது முக்கியப் பங்காற்றுகின்றன.
நமக்கென்று தனித்த குணம் இருப்பதனால் தான் நாம் இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாக இருக்கிறோம். இங்கே விழிப்பான சிவில் சமூகம் உயிர்ப்புடன் இருக்கிறது.
இந்தியாவின் பிரதானப் பிரச்சனையான பார்ப்பனியத்தை நம்மைப் போல எந்த மாநிலமும் ஒட்டுமொத்தமாக எதிர்த்து வெற்றிபெறவில்லை. இப்போது தான் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி பார்ப்பனர் அல்லாதோர் எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கின்றனர் என்று பிற மாநிலங்களில் ஆய்வு நடத்தப்போகிறார்கள். நாம் பல நூறு மைல் தூரம் முன்னேறியிருக்கிறோம்.
நம்மை இழிக்கவும் பழிக்கவும் பல நடிகர்களை நம் முன் இறக்கிப் பார்க்கிறார்கள்.
எல்லோரும் மண்ணைக் கவ்விக் கொண்டு ஓடியிருக்கிறார்கள், ஓடுவார்கள். புத்திசாலித்தனமாக ரஜினி தப்பித்தார். இல்லையென்றால் இந்நேரம் சில நூறு கோடிகளை இழந்து தமது காயங்களை நக்கிக்கொண்டிருப்பார். சிவாஜி, ராஜேந்தர், பாக்யராஜ், சரத்குமார், விஜயகாந்த் என பலர் காயம் பட்ட அறிவுக்களம் இது. விஜய்க்கு என்ன கொடுக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
விஜய் சில பல நூறு கோடிகளை இழப்பாரா அல்லது பாஜகவுக்கு உள்ளடி வேலை பார்த்து தனது கருப்புப்பணத்தைக் காப்பாற்றுவாரா என்று பார்ப்போம்

No comments:

Post a Comment