Thursday, October 6, 2022

இந்தியாவில் வேலைக்குப் போகும் பெண்கள்!

இந்தியாவில் வேலைக்குப் போகும் பெண்கள் பற்றிய ஒரு ஆய்வின் சில முடிவுகள்! 

1) இந்தியாவில் பெருவாரியான ஆண்களும் பெண்களும், வேலைவாய்ப்பு குறைவாக இருக்கும் போது ஆண்களுக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று நினைக்கின்றனர்.

2) இந்தியாவில் நான்கில் ஒரு பகுதி மக்களே, பெண்கள் பாகுபாட்டிற்கு உள்ளாகின்றனர் என்று கருதுகின்றனர்.

3) நான்கில் மூன்று பகுதி மக்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒரு பெரிய பிரச்சனை என்று கருதுகின்றனர்.

வழக்கத்தில் பெண்கள் வீட்டையும் குழந்தைகளையும் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் ஆண்களே வேலைக்குப் போகவேண்டும் என்று இருக்கிறது.

சம்பளத்திற்கு பெண்கள் வேலை பார்ப்பது கீழானது என்று கருதப்படுவதோடு, சமூக விழுமியங்கள் நல்ல தாயாக, மனைவியாக இருப்பதைத் தவிர வேறு ஒன்றையும் பெண்கள் தேர்ந்தெடுப்பதை தடுக்கின்றன.

பணியிடத்தில் பெண்களைப் பாதுகாக்க போஷ் சட்டம் 2013ல் (POSH Act 2013) நிறைவேற்றப்பட்டாலும் இன்னும் பல பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு அல்லது வன்முறைக்கு ஆளாகின்றனர்.

ஆண் - பெண் மக்கள் தொகை வேறுபாடும் இருக்கிறது. ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 918 பெண் குழந்தைகளே பிறக்கின்றனர். பாலினத் தேர்வு கருக்கலைப்பும், சிசுக்கொலையும் இந்த வேறுபாட்டை அதிகரிக்கின்றன.

இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களின் சராசரி வயது 28.7 ஆகும். அமெரிக்காவில் அது 38.5 ஆக இருக்கிறது. ஆனால் வாய்ப்புகள் இல்லாததால், 15-29 வயதிற்குள் உள்ள பெண்களில் 45% பேர் படிப்பிலோ, வேலையிலோ, பயிற்சியிலோ ஈடுபடாதிருக்கின்றனர்.

ஆயிரம் ஆண்டு பழமையான ஜாதி முறை, சில குறிப்பிட்ட வேலைகளைத் தேர்ந்தெடுப்பதைப் பாதிக்கிறது. 

கல்வி கிடைப்பதிலும் வேலையிலும் ஜாதியப் பாகுபாட்டை இந்திய அரசியலமைப்புச் சட்டம் தடை செய்திருந்தாலும் ஜாதியை அது தடை செய்யவில்லை.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மதரீதியான மக்கள் தொகை கீழ்வருமாறு :

இந்துக்கள் : 79.8%
இஸ்லாமியர்கள் : 14.2%
கிறிஸ்தவர்கள் : 2.3 %
சீக்கியர்கள் : 1.7%
பிற : 2%

இந்தியாவில் இருக்கும் பல இன, மத, மொழி, பண்பாடு, புவியியற் கூட்டுத்தன்மை நமது சிந்தனையில் ஒற்றை அடையாளத்திற்கு மாற்றாக பன்முகத்தன்மையைக் கொடுத்தாலும், பல்துறை குறுக்குவெட்டுப் பாகுபாடு (intersectional discrimination) சில பெண்களை மற்றவர்களை விட அதிகம் பாதிக்கிறது. 

15% இஸ்லாமியப் பெண்களே முறையான வேலைக்குப் போகின்றனர். அவர்களோடு ஒப்பிடும் போது
இந்துப்பெண்கள் : 27%
கிறிஸ்வதப்பெண்கள் : 31%
புத்தப்பெண்கள் : 33 % வேலைக்குப் போகின்றனர்.

இந்தியாவின் பொருளாதாரம் வெகுவாக வளர்ந்து வருகிறது. வரும் பத்தாண்டுகளில் 3 டிரில்லியினில் இருந்து 8 டிரில்லியனாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு மக்கள்தொகையில் ஏற்படும் மாற்றங்கள், தொழில்நுட்பங்களை வசப்படுத்துதல், நகரமயமாதல், வெகுசன நுகர்வு கலாச்சாரம் மற்றும் நிதிப் பங்கீடு ஆகியவைக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

இருந்தாலும் 15 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் 19% பேர் மட்டுமே இந்தியாவின் (சம்பாதிக்கும்) தொழிலாளர் பட்டியலில் வருகின்றனர். ஒப்பீடு செய்யும் போது 70% ஆண்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறுகின்றனர்.

இந்த இடைவெளியைக் குறைத்தால் இந்தியாவின் ஜிடிபி (GDP) மூன்று மடங்காக 2050ல் வளரும் என்று கணிக்கப்படுகிறது.

பல துறைகளில் பெண்கள் மிகவும் குறைவாகவே வேலை செய்கின்றனர். 
எண்ணெய் மற்றும் வாயு துறை : 7% பேர் தான் பெண்கள்
மருந்து மற்றும் மருத்துவம் : 11%
தகவல் தொழில்நுட்பம் : 28%
வாகன உற்பத்தி : 10%

2030ல் எந்திரமயமாதலின் காரணமாக ஒரு கோடியே 20 லட்சம் பெண்கள் வேலை இழக்க வாய்ப்பிருக்கிறது.

2021ல் 4.7% இடங்களில் மட்டுமே பெண்கள் தலைமைப் பொறுப்பிலும் (CEO) 7.7% இடங்களில் மட்டுமே (நிறுவனங்களின்) நிர்வாக சபையிலும் (Board) இருக்கின்றனர். 

ஆங்கிலத்தில் : Workplaces that Work for Women
மொழிபெயர்ப்பு : அமுதன் ஆர்.பி.

https://www.catalyst.org/research/women-in-the-workforce-india/

No comments:

Post a Comment